Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை படிப்படியாகக் குறையும் - சென்னை வானிலை

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2010 (18:07 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கே ஆந்திராவை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், ஆந்திர கடலோர மாவட்டங்களிலும், வட தமிழ்நாட்டிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வதால் தென் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments