Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை, வெ‌ள்ள பாதிப்பு : அதிகாரிகள் ஆய்வு!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2010 (17:32 IST)
வடகிழக்குப் பருவ மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.

அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர், காட்டுமன்னார் கோயில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், பின்னர் தஞ்சையில் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.

தஞ்சையில் மட்டும் சுமார் 27,000 எக்டேர் அளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தகுத்த நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

த‌ஞ்சை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் சுமார் 500 கி.மீ. சாலைகள் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், இதுகுறித்து அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதேபோல கடலோர மாவ‌ட்ட‌ங்க‌ள், வெ‌ள்ள பா‌தி‌ப்பு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் அ‌திகா‌ரிக‌ள் இ‌ன்று ஆ‌ய்வு நட‌த்‌தின‌ர்.

வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி சேத அறிக்கை குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

இதற்கிடையே திருவாரூரில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து சமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வரும் திருவாரூர், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண் - கொலையில் திடுக்கிடும் தகவல்.! சடலத்தை 2 நாட்கள் வீட்டில் வைத்திருந்த கொலையாளி..!!

தெரியாத நபர்களிடம் இருந்து அனுப்பப்படும் பணம்.. உஷாராக இல்லையென்றால் மொத்த பணமும் காலி..!

தங்கம் கடத்துபவர்களின் புது டெக்னிக்.. விமான நிலையங்களுக்கு சுங்கத்துறை எச்சரிக்கை..!

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

Show comments