நடிகை வனிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் பிணை வழங்கியுள்ளது.
நடிகை வனிதாவுக்கும், அவரது தந்தையும் நடிகருமான விஜயமாருக்கும் இடையே குடும்ப பிரச்சனையில் ஒருவர் மீது ஒருவர் காவல்துறையினர் புகார் செய்யும் அளவுக்கு குடும்ப விவகாரம் வெடித்தது.
இந்நிலையில் மதுரவாயல் காவல்துறையில் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் கணவர் ஆனந்தராஜனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து தம்மை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க நடிகை வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி முன் பிணை மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு முன் பிணை கொடுக்கக்கூடாது என்று விஜயகுமார் கூறியிருந்தார்.
இந்த மனுவை 26ஆம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக காவல்துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்றம் நடிகை வனிதாவுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.