அண்ணா சிலைக்கு கருணாநிதி மரியாதை
சென்னை , புதன், 15 செப்டம்பர் 2010 (13:10 IST)
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரதுக்கு சிலைக்கு முதலமைச்சர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதேபோல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சென்னை தலைமைச் செயலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொன்னையன் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.