Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை ம‌ண்டல ‌சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் கைது

கோவை ம‌ண்டல ‌சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் கைது
செ‌ன்னை , சனி, 8 மே 2010 (10:57 IST)
கொலை ‌‌மிர‌ட்ட‌ல் வழ‌க்‌கி‌ல் கோவை ம‌ண்டல ‌சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் ‌துரை திடீரென கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கூடலூ‌ர் ‌சி.எ‌ஸ்.ஐ. பேராய‌ர் சு‌விரா‌‌ஜி‌க்கு கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்ததாக கோவை ம‌ண்டல பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று கூ‌ற‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்‌கி‌ல் கூடலூ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராகு‌ம்படி பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது. ஆனா‌‌ல் பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜராக‌வி‌ல்லை.

இதையடு‌த்து அவரு‌க்கு ‌பிணை‌யி‌ல் வெ‌ளிவர முடியாத ‌பிடியாணையை ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிற‌ப்‌பி‌த்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை‌யை காவ‌ல்துறை‌யி‌னர் இ‌ன்று ‌திடீரென கைது செ‌ய்தன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட பேராய‌ர் மா‌ணி‌க்க‌ம் துரை ‌திரு‌ச்சபை பண‌‌‌‌ம் ரூ.3 கோடியை மோசடி செ‌ய்த வழ‌க்‌கி‌ல் மு‌ன்‌பிணை பெ‌ற்றவ‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil