Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு ஆய்வுப்பணியை எதிர்க்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2010 (16:17 IST)
'' மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை அருகே கேரள அரசு நட‌த்‌தி வரு‌ம் ஆய்வுப்பணிக்கு த‌மிழக அரசு எதிர்ப ்பு தெரிவிக்க வேண்டும ்'' பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கே‌ட்டு‌‌க் கொ‌‌‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், கேரள அரசு முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மறுபடியும் நீதிக்கு மாறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் நடக்க ஆரம்பித்துள்ளது. புதிய அணைக்கு ஆயத்தமாக நேற்று மண் பரிசோதனை, பாறை பரிசோதனை மற்றும் ஆய்வு பணிகளை மிகப்பெரிய எந்திரங்களை கொண்டு, துளையிடும் பணியை தொடங்கியுள்ளது.

இப்பணிக்காக, அப்பகுதியில் ஏராளமான மரங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. இது கேரளத்தின் சுற்ற ு‌‌ச ்சூழலை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் சுற்றுச்சூழலையும் பாதிக்கும். இப்பணி ஒரு வாரம் நடைபெறும் என்றும் கேள்விப்படுகிறோம்.

ஆளும் அரசுகள் இந்த ஆய்வுப்பணிக்கு உடனே எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக தலையிட்டு கேரள அரசின் அணைகட்டும் இப்பணியை தடுத்து நிறுத்திட வேண்டும் என பொ‌ன்.ராத‌ா‌கிரு‌ஷ்ண‌ன் கேட்டுக்க ொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

Show comments