Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் நீரில் மூழ்கி பலி

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2010 (15:33 IST)
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆட்டோ கால்வாயில் கவிழ நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை மாங்காடு அருகே வசிப்பவர் ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ், இவருக்கு வயது 35. இவரது மனைவி, மாமியார் மற்றும் இன்னும் சில உறவினர் ஆகியோருடன் சரவணன், வேலு என்ற 8 மற்றும் ஒரு வயது சிறார்களும் அடங்கிய குடும்பத்துடன் பட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.

அதன் பிறகு அனைவரும் அதே ஆட்டோவில் நேற்று இரவு 8 மணிக்கு பெரியபாளையம் கோவிலுக்குச் சென்றனர். அப்போது கால்வாய் அருகே சென்ற போது ஆட்டோ எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்தது.

இதில் 6 பேரும் பலியானார்கள். காலையில் கால்வாயில் ஆட்டோ மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினர்.

தீயணைப்புப் படையினர் ஒரே ஒரு உடலை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மீதி 5 பேரின் உடல்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments