முல்லை பெரியாறு பிரச்சனையில் காலதாமதத்தை ஏற்படுத்தவே அரசியல் சாசன அமர்வ ுக்கு மாற்ற இருக்கிறார்கள். முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறிய தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு தண்ணீரை ஏன் தேக்கவில்லை? கேரள மக்கள் நமக்கு விரோதிகள் அல்ல. முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு தவறாக நடந்துகொள்ளுமானால் அந்த மாநிலத்திற்கு பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது அவசியமாக இருக்கிறது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் புதியதாக படித்துவிட்டு வருபவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு இருக்கும். எனவே இது மிகவும் தவறான அணுகுமுறையாகும்.
தமிழ்நாட்டின் எந்த பகுதியையும் பிரிக்கவேண்டும் என்ற கருத்து மிக தீங்கான கருத்து. தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தீங்கான கருத்து. இதில் ஒரு சதவீதம் கூட எங்களுக்கு உடன்பாடு கிடையாது.
பென்னாகரம் சட்ட மன்ற இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று தா.பாண்டியன் கூறியிருப்பது பற்றி நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை. நாங்கள் அ.இ. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். பென்னாகரம் தொகுதியில் அ.இ. அ.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறேன். அ.இ. அ.தி.மு.க. போட்டியிடும்போது வெற்றிக்காக முழுவீச்சில் பாடுபடுவோம் என்று வைகோ கூறினார்.