Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலையில் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (15:15 IST)
திருவண்ணாமலை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் ஊழல் நடைபெற்று வருவதைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில ், திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

இந்தப் பணிகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும ், பல இடங்களில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால ், காலர ா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால ், உயிர்ச்சேதம ், உட்பட பல இடையூறுகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

திருவண்ணாமலை நகராட்சியில் நிலவும் அவல நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும ், இதுநாள் வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைக் கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில ், வரும் 27ஆம் தேதி காலை 10 மணியளவில ், திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments