Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்து விட்டனர்: தங்கபாலு

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2009 (18:01 IST)
தமிழக இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால ், நேற்ற ு இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளிலும் மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தேர்தலை புறக்கணித்த ஜெயலலிதாவை மக்கள் புறக்கணித்துவிட்டனர்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாளை சென்னை காமராஜர் அரங்கில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்க்கும் விழா நடைபெறுகிறது. இதேபோன்று, மற்ற மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

Show comments