Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்று முதல் சுவரொட்டிக்கு தடை

சென்னையில் இன்று முதல் சுவரொட்டிக்கு தடை
சென்னை: , புதன், 10 ஜூன் 2009 (09:44 IST)
சென்னை அண்ணாசாலை மற்றும் காமராசர் சாலைகளில் இன்று முதல் சுவரொட்டி ஒட்டவோ, சுவர் விளம்பரம் செய்யவோ தடை விதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அறிவித்ததை போல் poster free street என்று சொல்லக்கூடிய அளவில் முதலில் பரிசார்த்த ரீதியில் சுவரொட்டி ஒட்டவும், சுவர் எழுத்துக்கள் எழுதவும் தடை விதிக்கப்படும் என்றும், அதன்படி ஜூன் 10ம் தேதிக்கு (இன்று) பின்னர் அண்ணாசாலை, காமரசர் சாலை ஆகிய இரண்டு சாலைகளில் சுவரொட்டிகளும், சுவர் எழுத்துக்களும் தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அண்ணாசாலை, காமரசர் சாலை ஆகிய இரண்டு சாலைகளில் சுவரொட்டிகளுக்கும், சுவர் எழுத்துக்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.

இந்த இரண்டு சாலைகளிலும் உள்ள சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்துக்கள் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று முதல் அப்புறப்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil