Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குற்றவாளி கூண்டில் காங்கிரஸ், தி.மு.க. - வைகோ
Webdunia
புதன், 22 ஏப்ரல் 2009 (15:39 IST)
'' ஈழத் தமிழர்களை கொன்ற மாபாதகத்திற்கு முழு காரணமான காங்கிரசையும், தி.மு.க.வையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம்'' என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழின துரோகம் செய்த காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் மக்கள் மரண அடி கொடுக்கப் போவதால் அதைத் தவிர்த்து விடலாம் என்று மனப்பால் குடித்தவராக திடீரென்று தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்து அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கேட்டுள்ளார்.
இலங்கையில் போரை நிறுத்தாமல் சோனியா காந்தி தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்று சொல்லத் திராணியற்ற கருணாநிதி தமிழர்களை ஏமாற்றும் ஆஷ்டானபூபதி ஆகிவிட்டார்.
ஈழத் தமிழர்களைக் கொன்ற மாபாதகத்துக்கு முழுக்க, முழுக்கக் காரணமான காங்கிரசையும், தி.மு.க.வையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்ற ம.தி.மு.க. கருணாநிதியின் கபட நாடகத்துக்கு துணை போகின்ற தவறை ஒரு போதும் செய்யாது.
கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு தமிழர்களை முட்டாள்கள் எனக் கருதிக் கொண்டு நடத்துகின்ற வஞ்சக ஏமாற்று வேலை ஆகும். ம.தி.மு.க. திட்டமிட்டப்படி ஏப்ரல் 23ஆம் தேதி அன்று வேட்பு மனு தாக்கலிலும், அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும்.
ஈழத்தில் படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசுக்கும், அதற்குத் துணை நிற்கும் இத்தகைய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்க வரும் 24ஆம் தேதி அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழகம் எங்கும் கறுப்புக் கொடி ஏந்தி அறப்போர் நடத்தவும், படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக அன்று மாலை 6 மணிக்கு தாங்கள் இருக்கும் இடங்களிலேயே தமிழ் மக்கள் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தவும் வேண்டிக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?
பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!
சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..
எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!
Show comments