பத்திரிகையாளர்களுக்க ு ஓய்வூதியம ் வழங்கும ் திட்டம ், நீண்டநாட்களுக்க ு முன்ப ே செய்யப்பட்டிருக் க வேண்டும ். மனிதநே ய சிந்தன ை என்பத ு அனைவருக்கும ் அடிப்பட ை தேவ ை. இந் த உலகில ் நாம ் பார்த்தவற்ற ை, படித்தவற்ற ை, உணர்ந்தவற்ற ை, சான்றோர்கள ் கூறியிருப்பவற்ற ை உள்வாங்கிக்கொண்ட ு, அதன ் அடிப்படையில ் நாம ் வா ழ முயற்சிக் க வேண்டும ்.
ந ீ எதுவா க மா ற நினைக்கிறாய ோ, அதுபோலவ ே மாறுவாய ் என்பத ை நன்க ு உணர்ந்தவன ் நான ். உலகில ் வாழ்வத ு குறைவா க இருந்தாலும ், நாம ் வழங்கியத ு அதிகமா க இருக் க வேண்டும ்.
இந் த சமூகம ் அறியாமையில ் வாழ்ந்துக்கொண்டிருக்கிறத ு. அத ை மாற் ற முயற்சிக் க வேண்டும ் எ ன நினைத்தேன ். மாற்றத்த ை விரும்புகிறவர்கள ் தான ் முதலில ் மாறவேண்டும ். நாம ் வாழ்ந்துகாட்ட ி, மற்றவர்களுக்க ு வழிகாட் ட வேண்டும ். இந் த கருத்த ை உள்வாங்க ி, அதன்பட ி நான ் வா ழ முயற்சித்த ு கொண்டிருக்கிறேன ்.
எனது 39வது வயதில் 'உணவே மருந்து; மருந்தே உணவு என்ற ஓர் புத்தகத்தை படித்தேன். அதில் 17 பக்கம்தான் வாசித்தேன். ஆரோக்கியம் பற்றிய எனது தேடலுக்கான விடை அதில் கிடைத்தது. இதைதொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக முறையான உணவுமுறையை நான் பின்பற்றி வருகிறேன். ஆரோக்கியமில்லாதவர்களின் கல்வி, பணம், பதவி, புகழ் போன்ற அனைத்துமே வீண் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வாழ்வின் அடிப்படை தேவை கல்வி. அதுதான் மனித சமூகத்தை வாழவைக்கும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். இதனால் தான், மதுப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு ஒரு சவரன் மோதிரம் பரிசு என்று அறிவித்தேன். கடந்த 1983ம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 26 ஆண்டுகளில் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே என்னிடம் இருந்து மோதிரம் பரிசாக பெற்றுள்ளனர்.
இதுபோன்ற மாற்றங்களை, ஆட்சிப் பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே கொண்டுவர முடியும். எனவே, அதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை உருவாக்குவதற்காகத்தான் ஏழை, எளிய மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து இலவசமாக ஐ.ஏ.எஸ், பயிற்சி அளித்துவருகிறோம். குரூப்-1 தேர்வுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.
இந்த பயிற்சிகளை பெற்றும் மாணவ, மாணவிகளுக்கு 10 உறுதிமொழிகளை கொடுத்து, அதை வாழ்நாள் மூலம் கடைப்பிடிக்க செய்துவருகிறோம். இதன் மூலம் ஓர் ஆரோக்கியமான சமூகம் மலரும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.