Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்சே உருவபொ‌ம்மை எரி‌த்த மாணவர்க‌ள் கைது

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (16:59 IST)
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் இ‌ன்று நட‌த்‌திய ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ன் போது இல‌‌‌ங்கை அ‌திப‌‌ர் ராஜப‌க்சே‌யி‌ன் உருவபொ‌ம்மையை எ‌ரி‌த்தன‌ர். இது தொட‌ர்பாக 5 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

செ‌ன்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே நட‌ந்த இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌‌தி‌ன்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

‌ திடீரென அவ‌ர்க‌ள் ராஜப‌க்சே‌வி‌ன் உருவபொ‌ம்மையை எ‌ரி‌த்தன‌ர். தகவல் அற ி‌ந ்து விரைந்து வந்த காவ‌ல்துறை‌யின‌ர், எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌ந்த உருவபொ‌ம்மையை அணைத்தனர்.

உருவபொ‌ம்மை எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் துணை செயலாளர் ரவிக்குமார், கோவில்பட்டியை சேர்ந்த ரவி, விவேக் உள்பட 5 மாணவர்களை காவ‌ல்துறை‌யின‌‌ர் கைது செய்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments