Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்க எதிர்ப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (12:35 IST)
ஈரோடு அருகே கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்க விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம ், அலங்கியம் அருகே உள்ளது அத்திமரத்துவலசு. இங்கு இரண்டு கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனம் அமைந்தால் இதன் கழிவுகள் அமராவதி ஆற்றில் கலக்கும் என்பதால் இந்த நிறுவனங்களுக்கு விவசாயிகள் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் பழனிசாமி தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், அலங்கியம் தடுப்பணை அருகே சுமார் 120 ஏக்கரில் இரண்டு கோழிக்கறி ஏற்றுமதி நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆற்றிற்கு பாதிப்பு ஏற்படும்.

இதன் காரணமாக இந்த ஆற்றை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இந்த நிறுவனத்தை தடைசெய்யவேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments