ஈரோடு : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி யதற்காக அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது அரியப்பம்பாளையம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 2008-09ஈம் ஆண்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளனர்.
இதை பாராட்டி அரியப்பம்பாளையம் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்த சான்றிதழை ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மகேசன்காசிராஜன் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் கே.சி.பி.இளங்கோ மற்றும் செயல்அலுவலர் பி.கந்தசாமி ஆகியோரிடம் பாராட்டு சான்றிழை வழங்கினார்.