Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் போரை நிறுத்த திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதம்

Webdunia
வியாழன், 15 ஜனவரி 2009 (14:46 IST)
இலங்கையில் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய அரசு சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினார்.

சென்னையை அடுத்த மறைமலைநகரில் இன்று அதிகாலை 4 மணிக்கு திருமாவளவன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தனது உண்ணாவிரதம் சாகும்வரை நீடிக்கும் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

உண்ணாவிரதத்தை கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

ஈழத்தமிழர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments