முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசின் கடந்த 2 ஆண்டுகால சிறப்பான செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த மகத்தான அங்கீகாரம் திருமங்கலம் வெற்றி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், சோனியாகாந்தி வழி காட்டுதலில், பிரதமர் மன் மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் கடந்த 4 ஆண்டு கால மாபெரும் மக்கள் நலத்திட்டங்களுக்கும், முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசின் கடந்த 2 ஆண்டுகால சிறப்பான செயல்பாடுகளுக்கும் மக்கள் தந்த மகத்தான அங்கீகாரம் திருமங்கலம் வெற்றி.
ஓய்வூதியம ், தமிழ ் செம்மொழியானத ு போன் ற மத்தி ய அரசின ் சாதனைகளுக்கும ், தமிழ க அரசின ் சாதனைகளுக்கும ் மக்கள ் தந் த அங்கீகாரம ் தான ் திருமங்கலம ் வெற்ற ி. தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கும் மக்களின் தீர்ப்பு இது தான் என்பதை கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ள இந்த வெற்றிக்கு வழி வகுத்த மக்களுக்கும், அதற்காக உழைத்த காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தங்கபாலு கூறியுள்ளார்.