Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே உயிருக்கு போராடும் யானை : காப்பாற்ற வனத்துறையினர் தீவிரம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 12 ஜனவரி 2009 (15:43 IST)
ஈரோடு அருகே நோய்வாய்பட்டு உயிருக்கு போராடும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் தீவிரமுயற்சி செய்து வருகின்றனர்.

ஈரோடு அருகே உள்ளது அந்தியூர் வனப்பகுதி. இங்கு நேற்று ஒரு பெண் யானை நோய்வாய்பட்டு உயிருக்கு போராடி வருவது அந்தியூர் வனத்துறையினருக்கு தெரியவந்தது. உடனே மண்டல வனப்பாதுகாவலர் துரைராசு உத்தரவின்பேரில் வனத்துறையினர் உயிருக்கு போராடும் யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.

கால்நடைமருத்துவர் ரவிச்சந்திரன் மற்றும் அந்தியூர் வனசரகர் குப்புசாமி ஆகியோர் தலைமையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து டாக்டர் ரவிச்சந்திரன் கூறுகை‌யி‌ல், இந்தயானை குட்டிஈன்று ஏழு மாதங்கள் இருக்கலாம். இதனால் இதற்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடக்கும்போது தடுமாறி விழுந்து எழுந்து நிற்கமுடியாமல் போனது. இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின் யானை எழுந்து நடக்க வாய்ப்பு‌ள்ளது எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments