Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை : டி.ஆர். பாலு

Webdunia
ஞாயிறு, 11 ஜனவரி 2009 (17:51 IST)
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமை‌ச்ச‌ர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை திறந்துவைக்க வந்துள்ள மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு செய்தியாளர்களிடம் பேசினார்.

நாளை மாநில போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள லாரி உரிமையாளர்களை அழைத்துள்ளோம். கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், நடவடிக்கை கடுமையாக இருக்காது என்று கூறிய டி.ஆர். பாலு, பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments