Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:36 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ந‌ெ‌‌ல்லை, நாக‌ர்கோ‌விலு‌க்கு ‌சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது எ‌ன்று தெ‌‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 7, 9, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வரும் 8, 10, 14 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

அதேபோல் கோவையிலிருந்து சென்னைக்கு வரும் 13ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு செல்லும்.

இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் 13ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், சேலம், ஈரோடு, மதுரை வழியாக மறுநாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் எ‌ன்று தெ‌‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments