Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஆ‌ம் தே‌தி மணல் லாரிகளு‌ம் ஓடாது: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Webdunia
சனி, 3 ஜனவரி 2009 (09:41 IST)
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் 5 ஆ‌ம் தேதி நடத்தும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொட‌ர்பாக அ‌ச ்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.முனிரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில ், மத்திய அரசு, டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்று கோரி 5 ஆ‌ம் தேதி முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 60 லட்சம் லாரிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளிக்கிறது.

இதன்காரணமாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 75,000 மணல் லாரிகள் 5 ஆ‌ம் தேதி இரவு 12 மணி முதல் காலவரையின்றி ஓடாது. இதனால் கட்டுமானத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments