Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலம் வன்முறை: அ.இ.அ.தி.மு.க மீது ஸ்டாலின் புகார்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (09:50 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வன்முறையைத் தூண்டிவிட்டு, இடைத்தேர்தலை நிறுத்தி வைப்பதற்கு அ.இ.அ.தி.மு.க முயற்சிப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

திருமங்கலத்தில் இன்று தி.மு.க தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க.அழகிரியுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அ.இ.அ.தி.மு.க.வினர் திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகக் கூறி அக்கட்சியினருக்கும், தி.மு.க-வினருவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறித்தும், பணம் கொடுத்தது பற்றியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி அ.இ.அ.தி.மு.க செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், தோல்வி பயத்தால் அ.இ.அ.தி.மு.க.வினர் இதுபோன்று செயல்படுகின்றனர் என்றார்.

திருமங்கலம் தொகுதியில் கலவரத்தை தூண்ட சதி செய்து தேர்தலை நிறுத்த அ.இ.அ.தி.மு.க.வினர் முய‌ற்‌‌சி செய்வதாகவும், அதற்கு தி.மு.க ஒருபோதும் இடமளிக்காது என்றும் கூறினார்.

அ.இ.அ.தி.மு.க.வினரிடன் சதியையும் மீறி திருமங்கலத்தில் தி.மு.க வெற்றிபெறும் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments