Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங். அலுவலகம் தாக்குதல்: சிபிசிஐடி விசாரணை

Webdunia
ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (13:28 IST)
சென்னை சத்தியமூர்த்தி பவனில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடந்த சில நாட்களுக்கு முன் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது குறித்து தமிழ்நாடு குற்றப்புலனாய்வு காவல்துறையினர் (சிபிசிஐடி) விசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் ராதிகா, கூடுதல் துணை கண்காணிப்பாளர் முகமது ஷாஜகான், ஆய்வாளர் முத்துக்குமார் உட்பட 9 அதிகாரிகள் கொண்ட குழு இன்றுகாலை சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தனர்.

தாக்குதலின்போது காயம் அடைந்தவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு உள்ளிட்டோரிடம் இக்குழுவினர் விசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி-யினர் வந்தபோது, காங்கிரஸ் தொடக்கநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால், விழா முடிந்ததும் விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சிபிசிஐடியினர் சிறிது நேரம் காத்திருந்து விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments