மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட கடவுச்சீட்டு மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள் ளதாக அம்மாவட்ட கடவுச்சீட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கடவுச்சீட்ட ு ( பாஸ்போர்ட ்) விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் தமது விண்ணப்பங்களை நிரப்பி, நேரடியாக மாவட்ட கடவுச்சீட்ட ு மையத்தில் அளிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் மறுநாள் கடவுச்சீட்ட ு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசீலக்கப்படும். மாவட்ட கடவுச்சீட்ட ு மையத்தில் எந்த தாம தம ுமின்றி விண்ணப்பங்கள் உடனுக்குடன் கடவுச்சீட்ட ு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிடுகின்றன.
எனவே, மதுரை மாவட்ட கடவுச்சீட்ட ு விண்ணப்பதாரர்கள் கடவுச்சீட்ட ு அலுவலகத்திற்கு செல்லாமல், அந்த நெரிசலைத் தவிர்த்து கடவுச்சீட்ட ு மையத்திற்கே சென்று விண்ணப்பங்களை அளித்துவிடலாம்.
மாவட்ட கடவுச்சீட்ட ு மையத்தில் வரைவோலை ( டிமாண்ட் டிராப்ட் ) வாயிலாக கட்டணத்தை செலுத்த முடியும். கடவுச்சீட்ட ு அலுவலகம், மதுரை என்ற பெயருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட, மதுரையில் செலுத்தக்கூடிய வரைவோல ையை அளிக்கலாம்.
தட்கல், கடவுச்சீட்ட ு நகலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை கடவுச்சீட்ட ு அலுவலகத்தில் நேரடியாக அளிக்க வேண்டும் என்ற ும் மதுரை கடவுச்சீட்ட ு அலுவலர் தெரிவித்துள்ளார்.