Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை மறியல் செ‌ய்த கரும்பு விவசாயிகள் கைது

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
சனி, 20 டிசம்பர் 2008 (11:17 IST)
' ஈரோட்டில் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டாயிரம் கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு டன்னுக்கு இரண்டாயிரம் ரூபா‌ய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தற்போது கரும்பு வெட்டு நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் பெரும்பான்மையான விவசாயிகள் கரும்புகளை ஆலைகளுக்கு வெட்டதுவங்கியதால் கரும்பு ஏற்றிவரும் லாரிகை தடுத்தும் போராட்டம் நடத்தினர். நேற்று ஈரோடு தபால் அலுவலகம் முன் தங்கள் குடும்பத்துடன் கரும்பு விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களை ஈரோடு டவுன் காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் தனபால் தலைமையிலான காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். பின் மாலை‌யி‌ல் அனைவரு‌ம் விடுவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments