Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமே‌ஸ்வரம் மீனவர்கள் மீது ‌சி‌றில‌ங்க கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (15:55 IST)
க‌ச்ச‌த்‌தீவு அருகே ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்களை ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ர் சரமா‌ரியாக தா‌க்‌கியதோடு, அவ‌ர்க‌ளி‌ன் வலைகளை அறு‌த்து கட‌லி‌ல் தூ‌க்‌கி ‌வீ‌‌சி‌ச் செ‌ன்றன‌ர்.

ராம ே‌ஸ ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் கடல ு‌க்கு ‌மீ‌ன் ‌பிடி‌க்க‌ச் சென்றனர். அவ‌ர்க‌ள் இந்திய கடல் பகுதியான கச்சத்தீவு அருகே ந‌ள்‌ளிர‌வி‌ல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ‌ சி‌றில‌‌ங்க கடற்படையினர் ராமேசுவரம ், மீனவர்களை சுற்றி வளைத்து அவர் களை உரு‌ட்டு‌க்க‌ட்டைகளா‌ல் சரமாரியாக தாக்கினர். கடலுக்குள் விரித்திருந்த வலைகளை அறுத ்து எ‌ரி‌ந்து, விசைப் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி வீசினர்.

இ‌னிமே‌ல் இ‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்தா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ன்று ‌விடுவோ‌ம் எ‌ன்று ‌மீனவ‌ர்களை எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்து‌வி‌ட்டு அங்கிருந்து சென ்றன‌ர். இந்த தாக்க ுதலா‌ல் 20 மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உ‌யி‌ர் ‌பிழை‌த்தா‌ல் போது‌ம் எ‌ன்ற பய‌த்த‌ி‌ல் கரைதிரும்பிய மீனவர்களிடம் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனாலும் மீனவர்கள் மீன்துறை இயக்குனரிடம் எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments