பின்னர் ப டகில் இருந்த மீனவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து உருட்டுக் கட்டைகள ால் தாக்கினர். அவர்களின் வலைகளையும் அறுத ்து எறிந்தனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அள்ளிச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் சோகத்துடன் ராமேசுவரம் திரும்பினர்.
சிறிலங்க கடற்படையினரால் பலத்த காயம் அடைந்த மீனவர் ஜோசப் கூறுகையில், தனுஷ்கோடி அருகே 3ஆம் தீடை பகுதியில் நாங்கள் மீன்பிடித்துக்கொண ்டிருந்தபோது திடீரென அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர் எங்களை கடுமையாக தாக்கி, வலைகளை அறுத்து எற ிந்தனர்.
எங்களை ஜட்டியுடன் நிற்க வைத்து உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எங்கள் துணிகளையும் கடலில் தூக்கி வீசி விட்டு சென்றனர். இந்த பகுதியில் இனிமேல் மீன்பிடிக்க வந்தால் கொன்று விடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். உயிர் பிழைத்தால் போதும் என நாங்கள் ராமேசுவரத்திற்கு திரும்பி விட்டோம் என்று ஜோசப் கண்ணீர் மல்க கூறினார்.