Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அணைகளை பாதுகாக்க, மேம்படுத்த புதிய திட்டம்!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (18:24 IST)
உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் அணைகள் பாதுகாப்பு, மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் 4,050 பெரிய அணைகள் உள்ளன. 475 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போதுள்ளவற்றில் 60 சதவீத அணைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை.

அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும் மிகவும் முக்கியம். இதன் ஒரு பகுதியாக உலக வங்கியின் நிதியுதவியுடன் 'அணை பாதுகாப்பு உறுதி மற்றும் சீரமைப்பு திட்டம ்' தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா ஆகிய 4 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்புதலின் பேரில் இப்பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 182 அணைகளில் அடிப்படை அணைப் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. பாதிப்புகளை சரிசெய்தல ், சீரமைப்புப் பணிகள் 55 அணைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநிலங்களில் உள்ள சில அணைகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 'அணை பாதுகாப்பு உறுதி, சீரமைப்ப ு, பேரிடர் மேலாண்மை திட்டம ்' என்ற பெயரில் துவக்கப்பட்ட இத்திட்டம் தற்போது 'அணை சீரமைப்ப ு., மேம்பாட்டுத் திட்டம ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலக வங்கி, மத்திய, மாநில அரசுகள ், நிதியுதவி வழங்கும் அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியைக் கொண்டு 'அணை பாதுகாப்பு, மேம்பாட்டு நித ி' அமைக்கப்படும். இதன் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிதி பெற்று திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை உலக வங்கி தயார் செய்துள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள 10 அணைகளில் இதை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஆய்வு நடந்து வருகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

Show comments