Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் விற்பனை தீவிரம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
செவ்வாய், 3 ஜூன் 2008 (16:41 IST)
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் ஒரே நாளில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேங்காய் விற்பனையானது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வாழை, மஞ்சள், எள், ஆமணக்கு மற்றும் தேங்காய் உள்ளிட்ட விளை பொருட்கள் ஏலம் முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் இடைதரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைக்க வாய்ப்பு கிடைக்கிறது.

இங்கு நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில் ஒரே நாளில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தேங்காய்கள் ஏலம் முறையில் விற்பனையானது. தேங்காய் ஒன்று ரூ.3 முதல் ஏழு வரை விற்பனையானது.

நீண்ட மாதங்களுக்கு பிறகு அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் ஐம்பதாயிரம் தேங்காய்க்கு மேல் தற்போது விற்பனையாகியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments