Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விலைவா‌சி உய‌ர்வு‌க்கு மு‌க்‌கிய காரண‌ம் ஆ‌ன்லை‌ன் வ‌ர்‌த்தக‌ம்: வைகோ!

Webdunia
திங்கள், 19 மே 2008 (11:01 IST)
விலைவாசி உயர்வுக்கு முக்கியக் கார ண‌ம் ஆன்லைன் வர்த்தகம். எனவே, அதனை தடை செய்ய மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எ‌‌ன்று ம.தி.மு.க பொதுச் செயலாள‌ர் வைகோ கூ‌றினா‌ர்.

திருவாரூரில் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌‌ட்டி‌யி‌ல், தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவது ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. இச்செயல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல்; எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்கும் ஜனநாயக அத்துமீறல்.

தனது உறவினருக்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் பரிந்துரை கோரி அமைச்சர் பூங்கோதை பேசியது அதிகார மீறல். பூங்கோதை அளித்த ராஜிநாமா கடிதத்தின் மீதான நடவடிக்கை என்ன? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது மகனின் நிறுவனத்துக்கு சலுகை கோரி பல்வேறு அதிகார மீறல்களை மேற்கொண்டுள்ளார். பிரதமர் இதைக் கண்டிக்காமல் இருப்பது வேதனை.

விலைவாசி உயர்வுக்கு உணவு உற்பத்திக் குறைவு தான் காரணம் எனக் கூறப்படுவது தவறு. தற்போதைய உணவு உற்பத்தி கடந்த காலங்களை விட அதிகம் என்றே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம்- ஆன்லைன் வர்த்தகம். எனவே, ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ்று வ ைகோ கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments