Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தில்லையாடி வள்ளியம்மையை இழிவு படுத்துவதா? ஜெயலலிதா க‌ண்டன‌ம்!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (13:53 IST)
சுதந்திரப் போராட்ட வீராங்கனையை கொச்சைப்படுத்தும் வகையில் திரைப்படத்தில் பாடல் இடம் பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எ‌ன்று அ.இ.அ.‌த‌ி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ' குருவ ி’ என்ற திரைப்படத்தில் தில்லையாடி வள்ளியம்மையை இழிவு படுத்தும் விதமாக ஒரு பாடலை இடம் பெறச் செய்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் விதமாக திரைப்படத்தில் பாடல் இடம் பெற்றிருப்பது தமிழக மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

சுதந்திரப் போராட்ட வீராங்கனையை கொச்சைப்படுத்தும் வகையில் திரைப்படத்தில் பாடல் இடம் பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது தேசிய உணர்வு கொண்ட அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயலாகும். 'குருவ ி' படத்தின் ஒலி நாடா வெளியிட்ட பின்பு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக, சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இடம் பெறாது என்று தெரிவிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

பாடல் எழுதும் போதே இதனை சிந்தித்திருக்க வேண்டும். எதிர்ப்பு வந்தவுடன் அதற்காக வருத்தம் தெரிவிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மெட்டுக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம ா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சரித்திரப் புகழ் பெற்றவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும், வீராங்கனைகளையும், தமிழுக்காகப் பாடுபட்டவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படங்களில் பாடல்கள் இடம் பெறுவது வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments