Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க இ‌ன்று முத‌ல் 45 நாட்கள் தடை!

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (11:13 IST)
மீ‌ன்க‌ளி‌ன் இன‌ப்பெரு‌க்க‌த்தை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு விசைப்படகு மீனவர்கள் ஆ‌‌ழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று (15 ஆ‌ம் தே‌‌தி) முதல் அமலுக்கு வ‌ந்து‌ள்ளது.

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்தால் மீன்களின் இனப்பெருக்கம் தடைபட்டு, மீன் இனம் அடியோடு அழிந்துவிடும்.

இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த தடை உத்தரவு அடுத்தமாதம் மே 30ஆ‌ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவா‌ல் சின்னமுட்டம், நீரோடி, கொல்லங்கோடு, தூத்தூர், இரையுமன்துறை, தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம், மணக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, மண்டபம், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காசிமேடு பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று முதல் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலை உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்..!

18 வயதிற்குள் 50 முறை வன்கொடுமை! ஆசிரமத்தில் நடந்த அக்கிரமம்! - இந்தியா வந்து இங்கிலாந்து பெண்ணுக்கு நடந்த சோகம்!

ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய்.. தாசில்தார் வழங்கிய வருமான சான்றிதழ்..!

சீமானால் எங்கள் வாழ்க்கையை இழந்துட்டோம்.. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி குமுறல்..!

நாளை கிராம சபை கூட்டம்: மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிக்கை..!

Show comments