Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விவசா‌யிகளு‌க்கு கூடுத‌ல் ‌நிவாரண‌ம்: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (09:58 IST)
'' மழையா‌ல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் கருணாநிதி விரைவில் வெளியிடுவார ்'' என உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

திருநெல்வேலியில் அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் செய்தியாளர்களுக்கு ‌ அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் சுமார் 12,000 ஹெக்ட ே‌ர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய, மாநில, கிராமப்புறச் சாலைகள் என மொத்தம் 331 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

117 வீடுகள் முழுமையாகவும், 219 வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதமடைந்துள்ளன. 2 பே‌ர் உயரிழந்துள்ளனர். ஒரு மாடு, ஒரு கன்று, 11 ஆடுகள் ஆகியவை உயிர் இழந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு கூடுதல் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இதுதொடர்பாக கோட்டையில் முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே, கூடுதல் நிவாரணம் வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என ்று அமை‌ச்‌ச‌ர் ‌மு.க. ஸ்டாலின ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

Show comments