Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீனவ‌ர்களை ‌விடு‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் 3-வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ம்!

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2008 (13:51 IST)
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க வேண்டும ், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி ராமே‌‌ஸ்வர‌த்த‌ி‌ல் 3 நா‌‌ட்களாக ‌மீனவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

ராமநாதபுரம் மாவட்டம ், ராமேசுவரத்தில் 2500 விசைப்படகுகளும், 1500 நாட்டுபடகுகளும் உள்ளன. தினந்தோறும் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்று வருகின்றன. இதனா‌ல் எ‌ப்போதுமே களைக‌ட்டி இரு‌க்கு‌ம் ராமேசுவரம் கடற்கர ை. இ‌ந்‌நிலை‌‌யி‌ல் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை விடுவிக்க வேண்டும ், கச்சத்தீவு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும ், இலங்கை கடற்படை கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட‌ந்த 3 நா‌‌ட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ‌‌ மீனவ‌ர்க‌ள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது கு‌றி‌த்து ராம ே‌ஸ ்வரம் வருவா‌ய்துறை அ‌திகா‌ரி நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. மீனவர்களின் தொடர் வேலை ‌நிறு‌த்த‌ம் காரணமாக கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. படகு‌க‌ள் கட‌ற்கரை‌யி‌ல் ஓ‌ய்வு எடு‌த்த வ‌ண்ண‌ம் இரு‌க்‌கி‌ன்றன.

மீன்பிடி நாட்களில் ஒரு படகுக்கு தலா 20 கிலோ இறால் மீன்கள் கிடைக்கும். அ‌திக அள‌வி‌ல் இறால்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக ராமேசுவரத்தில் 5-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறன்றன. கடந்த 3 நாட்களாக மீன்கள் வரத்து இல்லாததால் ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ரூ.3 கோடிக்கும் மேல் அன்னிய செலாவணி இழப்பு ஏற்பட்டு உள்ளது. படகுகள் வேலைநிறுத்தத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை களை இழந்து காணப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments