Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு இரயில்: இன்று முன்பதிவு துவ‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (10:47 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு இ ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு இன‌்று துவ‌ங்‌கியு‌ள்ளது.

இது குறித்து தெற்கு இ ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில ், பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை( சனிக்கிழமை) மற்றும் 29, 5, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு இ ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இ ரயில் (வ.எண் 0630) திருச்சியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கம், சென்னையில் இருந்து 27 ஆ‌ம் தேதி, ஜனவரி 3, 10, 17 ஆ‌ம் தேதிகளில் திருச்சிக்கு சிறப்பு இ ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இ ரயில்( 0629) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு திருச்சியை சென்றடையும். அதே போல், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு 23 ஆ‌ம் தேதி, 30 ஆ‌ம் தேதி, ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு இ ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இ ரயில் (0649) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

மறுமார்க்கம், நாகர்கோவிலில் இருந்து 24, 31 மற்றும் ஜனவரி 7, 14 ஆ‌ம் தேதிகளில் சென்னைக்கு சிறப்பு இ ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இ ரயில் (0650) நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னையில் இருந்து 25 ஆ‌ம் தேதி மற்றும் ஜனவரி 1, 8, 15 ஆ‌ம் தேதிகளில் தூத்துக்குடிக்கு சிறப்பு இ ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இ ரயில் (வ.எண் 0685) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கம், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 26 ஆ‌ம் தேதி, ஜனவரி 2, 9, 16 ஆ‌ம் தேதி சிறப்பு இ ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு இ ரயில் (வ.எண் 0686) தூத்துக்குடியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த சிறப்பு இ ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய இ ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் சிறப்பு இ ரயில் (0686) கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (21 ஆ‌ம் தே‌தி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது எ‌ன்று தெற்கு இ ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments