திருச்சியில் 1000 கி.கி. வெடிபொருட்கள் பறிமுதல்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (11:59 IST)
திருச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் உரிமம் இன்றி வைக்கப்பட்டிருந்த 1000 கி.கி. அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.

திருச்சியின் புறநகர்ப்பகுதியான துவாக்குடிமலைப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் வாச்சானி தலைமையில் தமிழக காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவு அதிரடி நடவடிக்கை நடத்தியது.

அங்குள்ள குடோனில் 18 சாக்குப்பைகளில் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட ஜெலட்டின் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கிடங்கின் பொறுப்பாளராக உள்ள நாகராஜ் (45) கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூரில் இருந்து இந்த வெடிபொருட்கள் வாங்கி வரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாகராஜிடம் நடத்திய விசாரணையை அடுத்து மேலும் சில இடங்களிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் மேற்கொண்டு எதுவும் கிடைக்கவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

Show comments