காவிரி கரையை பலப்படுத்த ரூ.210 கோடி

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (15:25 IST)
காவிரி கரையை பலப்படுத்த ரூ.210 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திருச்சி பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகள் வரும் அக்டோபர் மாதத்தில் முடிவடைந்துவிடும். காவிரி கரையை பலப்படுத்த ரூ.210 கோடியில் புதிய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி பகுதியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக கோரையாறு, குடமுருட்டி ஆறு ஆகிய பகுதிகளில் ரூ.31.5 கோடியில் முதற்கட்ட பணிகளை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

அடுத்த கட்டமாக ரூ.47.5 கோடியில் இந்த பணிகள் நடைபெறும். அதே போல் திருச்சி மாநகராட்சி குடிநீர் திட்டப் பணிகள் ரூ.99 கோடியில் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக அவர் திருவானைக் கோவில், சிறிரங்கம பகுதிகளில் நடைபெற்ற பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

ஈரானை தாக்கினால் கடும் விளைவு!.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்ய அதிபர்...

கரூரில் நடந்த சதி!. சிபிஐ விசாரணையில் சொன்ன விஜய்!... டெல்லியில் நடந்தது என்ன?...

இது சும்மா டீசர்தான்!.. மெயின் பிக்சர் இருக்கு!.. விஜய்க்கு செக் வைக்கும் டெல்லி வட்டாரம்!...

நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற 7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!

Show comments