Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ ‌மீது டால்மியா வழக்கு!

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2008 (13:58 IST)
தன் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக, பிசிசிஐ ‌மீது ஜக்மோகன் டா‌ல்மியா கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்!

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தற்போது இப்பிரச்சனை குறித்து எதுவும் கூறமுடியாது என மறுத்துவிட்டார்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கொல்கட்டா உயர்நீதிமன்றத்திடம் அவகாசம் கேட்டுள்ளதாக மட்டும் தெரிவித்தார்.

பிசிசிஐ முன்னாள் தலைவரான ஜக்மோகன் டால்மியா, 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான், இந்தியா, இலங்கை குழுவான பில்காம் வங்கிக்கணக்கில் இருந்த சுமார் 2 கோடியே 90 லட்சம் ரூபாயை முறைகேடாக செலவிட்டதாக பொருளாதார குற்றங்களுக்கான (மும்பை) பிரிவு நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி கைது செய்யப்பட்ட டால்மியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments