Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த கூட்டம் வரை கவாஸ்கர் நீடிப்பார்

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (12:47 IST)
ஐ.சி.சி. உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டம் நடைபெறும் வரை கவாஸ்கர் ஐ.சி.சி. கிரிக்கெட் குழு தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. கிரிக்கெட் குழு தலைவராக இருந்து கொண்டு வர்ணனையாளராகவும், பத்தி எழுத்தாளராகவும் இரட்டை பணியில் கவாஸ்கர் ஈடுபடுவது குறித்து துபாயில் நடந்த ஐ.சி.சி. செயற்குழு கூட்டத்தில் பிரச்சனை எழுப்பப்பட்டது.

ஆனால் இந்த விவகாரம் குறித்து மால்கம் ஸ்பீடுடன் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதனால் உடனடியான நடவடிக்கை ஏதும் இல்லை என்று தெரிகிறது.

ஐ.சி.சி ஆண்டுக் கூட்ட வாரத்தில் உய‌ர்மட்டக் குழு இந்த விவகாரத்தை மீண்டும் விவாதிக்க உள்ளது. ஐ.சி.சி. கிரிக்கெட் குழுக் கூட்டம் வரும் மே மாதம் 5, 6ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. ஐ.சி.சி. ஆண்டு கூட்ட வார‌ம் ஜூன் 29, ஜூலை 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அதுவரை கவாஸ்கர் ஐ.சி.சி. பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments