Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் வசை: தடைக்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (11:02 IST)
மைதானத்தில் வீரர்கள் ஒருவரையொருவர் வசைபாடும் போக்கிற்கு முற்றுப் புள்ளி வைக்க வசையை தடை செய்யுமாறு இந்தியா கட்டுப்பாட்டு வாரியம் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை வைக்கவுள்ளது.

அடுத்த வாரம் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஐ.சி.ச ி. தலைமைச் செயலதிகா‌ரிகள் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்பபோவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்துள்ளார்.

" வசை பாடுதல் கிரிக்கெட் ஆட்டத்திற்கு தேவையில்லை, அது ஆட்டத்திற்கு நல்லதல்ல" இவ்வாறு நிரஞ்சன் ஷா பிபிசி ஸ்போர்ட்ஸ் நேர் காணலில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சைகளை உருவாக்கும் இந்த விவகாரத்தை தடை செய்தால்தான் ஆட்டம் தடையின்றி நடைபெறும், எனவே ஐ.சி.சி. தங்களது கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தான் நம்புபுவதாக நிரஞ்சன் ஷா மேலும் கூறுகையில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments