Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய தடகள அணியின் மேலாளராக காவல் அதிகாரி சைலேந்திர பாபு

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (11:20 IST)
ஜப்பானில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் மேலாளராக தமிழக காவல்துறையின் தலைமை ஆய்வாளராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் நாளை முதல் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

190 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ளும் இப்போட்டிகளில் 12 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இந்திய அணியின் மேலாளராக தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு காகித ஆலையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும்ட உள்ள் சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நமது அணியில் சில சிறந்த வீரர்களும், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சிறப்பாக சாதித்து பதக்கங்களுடன் திரும்புவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என்று தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு குறித்து சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

Show comments