Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெபாசிட் இழந்தால் கெஜ்ரிவால் அரசியலை விட்டு வெளியேறுவதாக உறுதி அளிக்கவேண்டும் - பாபா ராம்தேவ்

Webdunia
திங்கள், 17 மார்ச் 2014 (11:39 IST)
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிட தயாரென பேசும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெபாசிட்டை இழந்தால் அரசியலை விட்டு வெளியேற தயாரா என பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
FILE

பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமர் பதவியை அடைய அவசரம் காட்டுவதாக கூறிய பாபா ராம்தேவ் அவர் சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட தயாரென ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தது குறித்து பேசிய பாபா ராம்தேவ், கெஜ்ரிவால் வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியி்ட்டு டெபாசிட்டை இழந்தால் அரசியலை விட்டு விலகுவதாக உறுதி அளிக்க வேண்டும்.
FILE

கெஜ்ரிவால் அவரது அறிவை இழந்துவிட்டார். சோனியா மற்றும் ராகுல் காந்தியின் ஊழல் ஆட்சி குறித்து ஏதும் பேசாமல் அமைதியாக இருக்கும் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக நடப்பது போல செயல்படுகிறார் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments