Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரு வெடிகுண்டு: வாகன உரிமையாளர் மீது சந்தேகம்!

பெங்களூரு வெடிகுண்டு: வாகன உரிமையாளர் மீது சந்தேகம்!
, ஞாயிறு, 21 ஏப்ரல் 2013 (14:16 IST)
FILE
பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டுவெடித்தது இதில் 11 போலீசார் உடபட 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விசாரணையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்து வருகிறது.

தற்போது துப்புத் துலக்க தமிழக போலீஸ் கேரளா விரைந்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் அடிக்கடி கேரளாவை சேர்ந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் செய்ததும், தற்போது அந்த எண்ணை மாற்றி வேறு எண்ணை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிடைத்த எண்ணை வைத்துக் கொண்டு மேலும் விசாரணைக்காக தமிழக போலீஸார், கேரளா விரைந்துள்ளனர். இதனிடையே தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் கர்நாடகா காவல்துறையினரும் தமிழகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil