Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவிஸ் பெண் கற்பழிப்பு 3 பேர் கைது!

சுவிஸ் பெண் கற்பழிப்பு 3 பேர் கைது!
, ஞாயிறு, 17 மார்ச் 2013 (12:51 IST)
மத்தியப் பிரதேச மாநிலம், தாட்டியா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் அர்ச்சாவில் இருந்து அக்ரோவிற்கு சைக்கிளில் செல்ல திட்டமிட்டு சென்றுள்ளனர். அப்போது அவர்களை சூழ்ந்துகொண்ட 7 பேர் அவர்களை தாக்கியுள்ளனர்.

அந்தப் பெண்ணின் கணவரை தடியினை கொண்டு தாக்கியுள்ளனர். பின்னர் சுவிஸ் நாட்டு பெண்ணை அவர்கள் கற்பழித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் காயம் அடைந்த பெண் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil