Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஒலியை விட 5 மடங்கு வேகமுடைய ஏவுகணை

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2013 (16:39 IST)
FILE
உலகிலேயே அதிக வேகமுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஈடுப்பட்டுள்ளது.

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 2017ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என்று இந்தியாவிலுள்ள பிரம்மோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை ஏவுகணைகள் முன்னுரிமை அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் என தெரிகிறது. அதீத சக்திவாய்ந்த இத்தைகைய ஏவுகணைகளை வாங்குவதற்காக வேறு சில நாடுகளும் ஆர்வமாக இருக்கின்றன.

இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வடிவமைத்து வருகிறது. இந்த ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்த, உலகிலேயே மிக வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் நீர் மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகளும் உருவாக்க பிரம்மோஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments