அப்போது பேசி ய அவர ், 2014 ல ் வரவிருக்கும ் நாடாளுமன் ற தேர்தல ் வர ை காங ்க ிரஸ ் ஆட்சியாளர்கள ை தூங் க விடப்போவதில்ல ை. ஏற்கனவ ே அக்டோபர ் 2 அன்ற ு நான் புதிய கட்சியை தொடங்கபோவதாக கூறியதும் அவர்களது நிம்மதி போய்விட்டது.
புதிய கட்சியை துவங்க காங்கிரஸ் தான் அறிவுறுத்தியது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கூறியபோது காங்கிரஸ்காரர்கள் தான் அரசியல் கட்சியை ஆரம்பித்து மன்றத்தில் பெரும்பான்மையை காண்பித்து மசோதாவை நிறைவேற்றி கொள்ளும்படி கூறினர். அதனால் தான் இந்த கட்சி. விரைவில் காங்கிரஸுக்கு அரசியலில் புதிய பாடத்தை கற்று கொடுக்க போவது நிச்சயம் என்றார்.
மேடையில் கெஜ்ரிவால் இவ்வாறு பேசும்போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் கருப்பு கொடி வீசினர். இதனால் அங்கு குவிந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கும், சல்மான் குர்ஷித் ஆதரவாளர்களான காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.