Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை வணிக வளாகத்தில் பயங்கர தீ

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2012 (13:26 IST)
மும்பையில் அமைந்திருக்கும் வணிக வளாகத்தின் 12-வது மாடியில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது.தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை பாந்த்ரா குர்லா என்னும் இடத்தில் உள்ள முதல் சர்வதேச நிதி மையத்தின் வளாகத்தின் 11-வது மாடியில் இன்று காலை திடிரென தீ பிடித்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீ அனைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர், எனினும் தீ 13 ஆவது மாடி வரை பரவியது.

அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆறு தீயணைப்பு வண்டிகள், ஆறு தண்ணீர் வண்டிகள் மற்றும் சில சிறப்பு உபகரண வாகனங்கள் மூலம் தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அங்கு உயிர் சேதம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

Show comments