விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
போபாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மற்றும் கைலாஷ் ஜோஷி மற்றும் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றியும் அமைச்சர் ஒருவரால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது குறித்தும் பேசினார்.
இவர்கள் அனைவரையும் தற்காலிகமாகச் சிறையில் வைத்துவிட்டு வெளியே விடுமாறு மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் உமாசங்கர் பார்கவா உத்தரவிட்டார்.