Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலைவாசி உயர்வைக் கண்டித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2012 (17:06 IST)
விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

போபாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாரதிய ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மற்றும் கைலாஷ் ஜோஷி மற்றும் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நடைபெறும் ஊழல்கள் பற்றியும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றியும் அமைச்சர் ஒருவரால் 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது குறித்தும் பேசினார்.

இவர்கள் அனைவரையும் தற்காலிகமாகச் சிறையில் வைத்துவிட்டு வெளியே விடுமாறு மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் உமாசங்கர் பார்கவா உத்தரவிட்டார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments