Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகள்: இந்தியா கவலை

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2012 (13:39 IST)
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகளின் வருகை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

சீனா சென்றுள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சர் யாங் ஜியெச்சி உள்ளிட்ட 4 தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகளின் வருகை குறித்து கிருஷ்ணா, இந்தியாவின் கவலையை வெளியிட்டார்.

முன்னதாக இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் கூறுகையில், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் வீரர்கள் உள்ளிட்ட 4,000 சீனர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளனர் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments